மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Friday, December 31, 2010

கொஞ்சம் யோசிங்க - இந்த ஆண்டு எடுக்க வேண்டிய புத்தாண்டு தீர்மானங்கள்

அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய இந்த ஆண்டு
புத்தாண்டு தீர்மானங்கள்.
பொதுவாக எனக்கு புத்தாண்டு தீர்மானங்களில் நம்பிக்கை இல்லை.
இருப்பினும் ஊரோடு ஒத்துப்போகிறேன். நாம் அனைவரும்
நம்முடைய நன்மைக்காக , நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்மைக்காக
நம் நாட்டினுடைய நன்மைக்காக எடுக்க வேண்டிய சில
தீர்மானங்கள் உள்ளன . அறிஞர் அண்ணா சொன்னது போல
வீடு எப்படியோ நாடும் அப்படித்தான் இருக்கும். என்னை
பொறுத்தவரையில் தனிமனிதன் எப்படியோ அப்படித்தான்
அவன் நாடும் இருக்கும்.இந்த புத்தாண்டில் நாம் எடுக்க
வேண்டிய சில தீர்மானங்கள்
1 .  குறைந்த பட்சம் ஒருவர் ஒரு மரக்கன்றையாவது  இந்த
      ஆண்டில் நடவேண்டும்.
2 .  முடிந்தவரை கார், பைக் போன்ற வாகனங்களை தவிர்த்து
      பொது வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.இதனால்
      நாட்டின் எரிபொருள் தேவையை நம்மால் இயன்றவரை
      சேமிக்க முடியும்.
3 .  வீட்டில் , அலுவலகங்களில் குண்டு பல்புகளை பயன்
      படுத்துவதை தவிர்த்து CFL  பல்புகளை பயன்படுத்துவோம்.
4 .  போக்குவரத்து விதிகளைப்பின்பற்றுவோம் .
5 .  ஓட்டுக்கு காசு வாங்குவதை தவிர்ப்போம்.
6 .  தேர்தலில் கண்டிப்பாக வாக்களித்து நம் ஜனநாயக கடமையை
      ஆற்றுவோம்.
7 .  திறந்த வெளிகளில் மல, ஜலம் கழிப்பதை தவிர்ப்போம்.
8 .  பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
9 .  ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை சேகரிக்க முயற்சி
      செய்வோம்.
10 .ஹாப் அடிப்பவர்கள் க்வாட்டர் அடிக்கவும் க்வாட்டர்
     அடிப்பவர்கள் கட்டிங் அடிக்கவும் கட்டிங் அடிப்பவர்கள்
      ஒரு அவுன்ஸ் அடிக்கவும் முயற்சி செய்வோம்.
      (டாஸ்மாக்கின் நலன் கருதி தயவு செய்து யாரும்
      குடிப்பதை நிறுத்திவிட வேண்டாம் . ஏன் என்றால்
      தமிழக அரசை வாழ வைப்பதே டாஸ்மாக் தான்
      என்பதை மறந்து விட வேண்டாம் ).ஹி ..... ஹி..
11 . பீர் அடிப்பவர்கள் ஹாட்டுக்கு மாறாமல் இருக்க முயற்சி
      செய்வோம்.
12 . இரண்டு பாக்கெட் சிகரெட் அடிப்பவர்கள் ஒரு பாக்கெட்டும்
      ஒரு பாக்கெட் அடிப்பவர்கள் அரை பாக்கெட்டாகவும்
      குறைத்துக்கொள்ள முயற்சிப்போம்.
13  திருட்டு விசிடி யில் படம் பார்க்காமல் இருக்க முயற்சி
      செய்வோம்.
14 .குழந்தைகளை வேலைக்கு அமர்த்தாமல் இருப்போம் .
15 . மிக முக்கியமாக சக மனிதனை மனிதனாக மதிப்போம்.

எந்த ஒரு மனிதனும் மற்றவர்கள் இது போல் இருக்க
வேண்டும் என்று நினைக்கிறான் ஆனால் யாரும் தன்னை
மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை.

மாறுவோம் வளருவோம்.

அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஜி.ராஜ்மோகன்

1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.
2011 சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.