மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Friday, December 3, 2010

பார்க்க வேண்டிய புகைப்படங்கள்

"கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" .இந்த தம்பதிகளை பாருங்கள் .இந்த பெண் தான் எத்தனை கொடுத்து வைத்தவள் . 
இந்த கணவனுக்கு என் கோடானு கோடி வந்தனங்கள் .
  
"புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்க
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு "        -  குறள் 79



"மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை "                   குறள் 58
         

"பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.-"                                                குறள்  61
         



"அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு " -             குறள் 80
 

"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
                சொல்கேட்டல் இன்பம் செவிக்கு" -     குறள் 65                   

.
"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு   "      - குறள் 73


"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் "-      குறள் 64
 




"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை"- குறள் 55                         

"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."-        குறள் 66


 


"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு    "         -குறள் 60



நன்றிகளுடன்
ஜி. ராஜ்மோகன் 


7 comments:

Chitra said...

படங்களும் அதற்கேற்ற குறள்களும் மனதை கவர்ந்தன. பகிர்வுக்கு நன்றிங்க.

Unknown said...

ராயல் சல்யூட்...

ஜி.ராஜ்மோகன் said...

சித்ரா தங்களின் மேலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . தொடர்ந்து வாருங்கள்

ஜி.ராஜ்மோகன் said...

அன்பு செந்தில் மிக்க நன்றி.

CS. Mohan Kumar said...

அருமையான படங்கள் அற்புத குடும்பம் பகிர்ந்தமைக்கு நன்றி

தமிழ் மணம் தமிழிஷ் போன்ற திரட்டிகளில் தங்கள் பிளாகை இணையுங்கள். எனக்கே இது எப்படி என தெரியாது தங்களை போல நானும் ரொம்ப காலம் இணைக்காதிருன்தேன் , நண்பர்கள் தான் இணைத்து தந்தனர். அதன் பின்னே பலரும் வந்து வாசிக்க துவங்கினர்

சி.பி.செந்தில்குமார் said...

கலங்க வைத்த படங்கள்,கலக்கலான பகிர்வு

'பரிவை' சே.குமார் said...

இந்தப் படங்களை மின்னஞ்சலில் வந்து பார்த்திருக்கிறேன்...
படங்களுக்காக தாங்கள் பதிந்திருக்கும் குறள்கள் அனைத்தும் அருமை.