மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Tuesday, November 16, 2010

தமிழ் சினிமாவில் தொடக்க காலத்தில் திரைத்துறையினரின் பெயர்கள்

தில்லுமுல்லு படத்தில் ரஜினி தன் பெயரை சொல்லும்  போது  தன் ஊர் பெயரோடு சேர்த்து அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் என்று சொல்லுவார் .அதுபோலதான் தமிழ் சினிமாவின் துவக்க காலத்தில் திரைக்கலைஞர்கள் தங்களது பெயர்களையும் ஊர்ப்பெயரோடு சேர்த்தே வைத்திருக்கிறார்கள் .அவ்வாறு பெயர் வைத்திருந்த திரைக்கலைஞர்களின்
பெயர்கள் ............

M .G .R -                          மருதூர் கோபாலமேனன் ராமசந்திரன்
V .C .கணேசன் -        விழுப்புரம் சின்னையா கணேசன்
M .K .T  -                         மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன்
C.N - அண்ணாதுரை -காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை
N.T .ராமாராவ் -        நண்டமுறி தாரக ராமாராவ்
S.V. ரங்காராவ் -      சமரல வெங்கட ரங்காராவ்
S.S.வாசன் -              சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன்
L.V.பிரசாத் -            லக்ஷ்மி வரபிரசாத்ராவ்
A.V.M -                       ஆவிச்சி மெய்யப்ப செட்டியார்
P .U .சின்னப்பா -   புதுக்கோட்டை உலகநாதப்பிள்ளை சின்னப்பா
S .G .கிட்டப்பா -    செங்கோட்டை கங்காதரஅய்யர் கிட்டப்பா
T .S .பாலையா -    திருநெல்வேலி பாலையா
J .P .சந்திரபாபு -     ஜோசப் பனிமயதாஸ்  சந்திரபாபு
N .S .K -                      நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்
R.S.மனோகர் -       ராமசாமி சுப்பிரமணியம் மனோகர்
M.N.நம்பியார் -       மஞ்சேரி நாராயணன் நம்பியார்
M.S.விஸ்வநாதன்  -மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன்
K.V.மகாதேவன் - கிருஷ்ணன்கோவில் வெங்கடாசலம் மகாதேவன்
T.K.ராமமூர்த்தி - திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி
A.M.ராஜா -            எமலா மன்மதராஜூ ராஜா
S.P.பாலசுப்ரமணியம் - ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்பிரமணியம்
T .R.ராஜகுமாரி -      தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜகுமாரி
K .B..சுந்தராம்பாள் - கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
M.S.சுப்புலட்சுமி -     மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
M.L.வசந்தகுமாரி -மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி
A.P.நாகராஜன் -     அக்கம்பேட்டை பரமசிவன் நாகராஜன்
S.S.ராஜேந்திரன் -     சேடபட்டி சூர்யநாராயணதேவர் ராஜேந்திரன்
T.R.சுந்தரம்-       திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்
P.B.ஸ்ரீனிவாஸ் -     பிரதிவதி பயங்கார ஸ்ரீனிவாஸ்
L.R.ஈஸ்வரி -       லூர்துமேரி ராஜேஸ்வரி ஈஸ்வரி
T.M.சௌந்தராஜன் -     தொகுலவ மீனாட்சி ஐய்யங்கார் சௌந்தராஜன்
C.S.ஜெயராமன் -           சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன்
T.K.ராமமூர்த்தி .          திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி

ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பார்த்ததாலும் ஏற்கனவே கணேசன் என்ற பெயரில் நடிகர் இருந்ததாலும்"ஜெமினி கணேசன்" என்ற பெயரை அமரர் வாசன் அவர்கள் வைத்தார்.
"சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் " என்ற நாடகத்தைப்பார்த்த
தந்தை பெரியார் அவர்கள் கணேசன் என்ற பெயரை "சிவாஜி கணேசன்" என்று மாற்றினார்.


No comments: