மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Wednesday, January 12, 2011

படித்ததில் பிடித்தது - வண்ணநிலவனின் "காலம்" புதினம்

படித்ததில் பிடித்தது - வண்ணநிலவனின் "காலம்" புதினம்.

வண்ணநிலவன் அவர்கள் எழுதிய "காலம்" புதினம் மிக அருமையான
புதினமாகும். வண்ணநிலவன் அவர்கள் சில காலம் திருநெல்வேலியில்
ஒரு வக்கீலிடம் பணிபுரிந்திருக்கிறார். அப்போது அவர் அவதானித்த
சில விஷயங்களை வைத்து காலம் புதினத்தை அவர் எழுதியிருக்கிறார்.
 நாவல்,படிப்பவர்களை அவர்கள் கைபிடித்து கூட்டிச்செல்லும் மிக
எளிமையான நடையில் உள்ளது.

 இந்தக்கதையின் நாயகன் நெல்லையப்பன் இருபது வயதுகளின் 
 மத்தியில் இருப்பவன். ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக சொற்ப ,
சம்பளத்திற்கு வேலைப்பார்க்கிறான். அவனது அப்பா
ஒரு மளிகைக்கடையில் வேலைப்பார்க்கிறார். கல்யாணமான
அவனது அக்காவும் மச்சானும் இவனது வீட்டிலேயே
தங்கி இருக்கிறார்கள்.

நெல்லையப்பனுக்கு கோர்ட்டும்
வீடும் மட்டுமே உலகம். அது தவிர சினிமா பார்ப்பதும்
இலக்கியம் படிப்பதும் அவனுக்கு பொழுதுபோக்கு.
இவனது எதிர் வீட்டிலிருக்கும் இவன் அக்கா வயதுள்ள 
காந்திமதி இவனிடம் தோழி மாதிரி பழகுகிறாள் .
அவனுக்கும் அவளை ரொம்பப்பிடிக்கும் . நெல்லையப்பனை
போல காந்திமதிக்கும் இலக்கியத்தில் ஆர்வமுண்டு
.தாங்கள் படித்ததை இருவரும் பகிர்ந்து கொள்வதுண்டு .
காந்திமதி சங்கரன் என்பவனை காதலிக்கிறாள். நெல்லையப்பனும் 
சங்கரனை மச்சான் என்றே அழைக்கிறான் . 
நெல்லையப்பனுடன் வேலை பார்க்கும் பெரிய குமாஸ்தா சிதம்பரம்பிள்ளைக்கு தன் மகளை நெல்லையப்பனுக்கு 
கல்யாணம் பண்ணி கொடுக்க ஆசை . நெல்லையப்பன்
அப்பாவிற்க்கோ சொத்து வைத்திருக்கும் தன்தங்கை மகளான
 மீனாச்சிக்கு கட்டிக்கொடுக்க ஆசை.
நெல்லையப்பனுக்கோ சென்னை சென்று இன்னும்
 நிறைய சம்பளம் கிடைக்கும் வேலையில்
சேர வேண்டும் என்று ஆசை.

இந்நிலையில் நெல்லையப்பனுக்கு காந்திமதி மீது
உள்ளூர ஒரு இனக்கவர்ச்சி ஏற்படுகிறது.
நெல்லையப்பனின் அப்பாவோ தன் தங்கை மகளுக்கு
நெல்லையப்பனை பேசி முடித்துவிடுகிறார் .நெல்லையப்பனும் 
வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு ஒத்து கொள்கிறான் 
என்று கதை முடிகிறது . 

கதையின் வாயிலாக வண்ணநிலவன்  திருநெல்வேலியை
நம் கண்முன்னே நடமாட விடுகிறார். கோர்ட் காட்சிகளை
அவர் எழுதியிருக்கும் விதம் படிக்கும் போது ஏதோ
சினிமாவை பார்ப்பது போல் இருக்கிறது.
இருபது வயதுகளில் இருக்கும் இளைஞர்களின்
மனஓட்டத்தை, தடுமாற்றத்தை தன் எழுத்தின் வழியே
அப்படியே பதிவு செய்திருக்கிறார். வண்ணநிலவனின்
சிறப்பு அவர் காட்சிகளை விவரிக்கும் விதமாகும்.
பீர்பாத் ஹோட்டல் ,  கோர்ட் காண்டீன், தாமிரபரணி ஆறு
போன்றவை அவரது கதையின் கதாபாத்திரங்களாகவே
மாறிவிடுகின்றன .

அனைவரும் படிக்க வேண்டிய புதினம் இது .
ஆனந்த விகடன் பதிப்பாகவும் ,கிழக்கு பதிப்பாகவும்
 இது வெளிவந்திருக்கிறது.

 என்றும் நன்றிகளுடன்,

ஜி.ராஜ்மோகன்

4 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு நண்பரே.... ஒரே பாராவாக எழுதாமல் பிரித்து பாரா இடுங்கள்.

ஜி.ராஜ்மோகன் said...

மிக்க நன்றி குமார் ! அப்படியே செய்து விடுகிறேன்

Philosophy Prabhakaran said...

புத்தக சந்தையில் வாங்க முயல்கிறேன்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News