மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Thursday, November 18, 2010

படித்துப்பிடித்த பிடித்துப்படித்த புத்தகங்கள்

ஓவ்வொரு தனி மனிதன் வளர்ச்சிக்கும் ,வெற்றிக்கும் எப்படி  அவரது பெற்றோரும் ,ஆசிரியர்களும் 
எவ்வாறு உதவுகிறார்களோ அது போலவேதான் அவன் படிக்கும் 
புத்தகங்களும் உதவுகின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது . 
புத்தகங்கள் மனிதனை பண்படுத்துகிறது.அப்படி நான் படித்த சில நல்ல புத்தகங்களைப்பற்றிஇங்கே பகிர்ந்து கொள்ளப்போகிறேன் . என்னுடைய 
பதின் வயதில் எழுத்தாளர் பட்டுக்கோட்டைபிரபாகர் அவர்கள் எழுதிய
 புத்தகங்களை மட்டுமே படித்து வந்தேன் .அவ்வப்போது ராஜேஷ்குமார் 
நாவல்களையும் படிப்பதுண்டு .பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஏறக்குறைய அனைத்து  நாவல்களையும்  படித்திருப்பேன் என்றே நினைக்கிறன்.வெகுஜனஇதழ்களில் எழுதினால் அவை நல்லஇலக்கியமாக 
கருதப்படுவதில்லை.ஆனால் பி.கே.பி யின் சமூக நாவல்கள் தான் என்னுள் 
ஒரு பக்குவத்தை ஏற்படுத்தியது .குறிப்பாக  "தொட்டால் தொடரும்", " ஜன்னல் கைதிகள்", "கனவுகள் இலவசம்" ,"கொஞ்சம் காதல் வேண்டும்"
"எப்படியும் ஜெயிக்க வேண்டும்","கத்திக்கப்பல்" "சண்டிக்குதிரை" போன்ற நாவல்கள் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்." கொஞ்சம் காதல் வேண்டும்" நாவலின் பாதிப்பை "முகவரி" திரைப்படத்தில் காணலாம். பி.கே. பியின் எழுத்தில் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும். ஆனால் அவர் சமூக நாவல்களை காட்டிலும் கிரைம் நாவல்களில் தான்
அதிகம் பேசப்பட்டார். அவரது கதாபாத்திரங்கள் பரத் - சுசீலாவை யாராலும் மறக்கமுடியாது.இப்பொழுது அவர் அதிகம் எழுதுவதில்லை.

என்னுடைய இருபதாவது வயதில் தான் எனக்கு "எழுத்துசித்தர்" பாலகுமாரன் அவர்களின்  எழுத்து அறிமுகமானது.அதற்கு முன்பு பாலகுமாரனை படித்தால் பத்துப்பக்கங்களுக்கு மேல் படிக்க முடிந்ததில்லை.சில காலம் கழித்து அவரின் எழுத்துகள் எனக்கு பிடிபட ஆரம்பித்தன.பின்னர் வெறிகொண்டு அவரது எழுத்துகளை தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.அவரது எழுத்துக்கள் என்னுள் ஒரு புதிய மனிதனை உருவாக்கியது என்றே சொல்லலாம்.குறிப்பாக "இரும்புக்குதிரைகள்", "மெர்குரிப்பூக்கள்", "கரையோர முதலைகள்",  "நீ வருவாயென", "இனிது இனிது காதல்இனிது", "பயணிகள் கவனிக்கவும்", நெளி மோதிரம்"இன்னும் எத்தனையோ சொல்லக்கொண்டே போகலாம் .

அதன் பின்னர் கவிப்பேரரசு  வைரமுத்து அவர்களுடைய படைப்புக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.அவரது "தண்ணீர் தேசம்" கதையை ஒரே மூச்சில் வாசித்தேன். சத்தியமாக இந்த நூல் ஒரு விஞ்ஞான காவியம் தான். தமிழில் டைட்டானிக் கதையை எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ 
அப்படிப்பட்ட ஒரு படைப்பு அது. அவரது பிற படைப்புகள் "மீண்டும் என் தொட்டிலுக்கு","காவி நிறத்தில் ஒரு காதல்", " ஒரு போர்க்களமும் இரண்டு  பூக்களும்", "இதனால் சகலமானவர்களுக்கும்", "வடுகபட்டி முதல்
வால்காவரை"," சிற்பியே உன்னை செதுக்குகிறேன்", "கவிராஜன் கதை", "இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள்""இந்த பூக்கள் விற்பனைக்கல்ல", "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்", "பெய்யனபெய்யும் மழை", "ரத்த தானம்"
"கள்ளிகாட்டு இதிகாசம்", "கருவாச்சி காவியம்"' "பாற்கடல்" முதலிய படைப்புகள் மிக அற்புதமானவை.
அனைவரும் படிக்க வேண்டியவை.

அதன் பின்னர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின்  இணையத்தளம் மூலமும் "கதாவிலாசம்"
என்ற புத்தகத்தின்  மூலமும் நிறைய படைப்பாளிகளைப்பற்றி தெரிந்துகொண்டேன் . அப்படிப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளில்
நான் விரும்பிப்படித்த சில படைப்புகள் :

நெடுங்குருதி - எஸ். ராமகிருஷ்ணன்
யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
உபபாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்
உறுபசி -எஸ்.ராமகிருஷ்ணன்
அனல்காற்று - ஜெயமோகன்
ரப்பர் - ஜெயமோகன்
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
கரைந்த நிழல்கள்- அசோகமித்திரன்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
காகித மலர்கள் -ஆதவன்
சூரிய வம்சம் - சா. கந்தசாமி
வாடாமல்லி - சு. சமுத்திரம்
பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு
தலைமுறைகள் -நீல. பத்மநாபன்
ஒற்றன் - அசோகமித்திரன்
கூகை -சோ .தர்மன்
கள்ளி -வாமு .கோமு
சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் - வாமு.கோமு
எரியும் பனிக்காடு - பி.ஹச்.deniyal
ஏறுவெயில் -பெருமாள் முருகன்
ரெண்டு - பா.ராகவன்
தூணிலும் இருப்பான் -பா. ராகவன்
நான்காவது எஸ்டேட் - கிருஷ்ணா டாவின்சி
மூன்று விரல் - இரா .முருகன்
அரசூர் வம்சம் -இரா.முருகன்
சத்திய சோதனை -இந்திரா பார்த்தசாரதி
தந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி
மானிடம் வெல்லும் - பிரபஞ்சன்
காதலெனும் ஏணியிலே - பிரபஞ்சன்
வானம் வசப்படும் -பிரபஞ்சன்
சோளகர் தொட்டி- பாலமுருகன்
சமுதாய வீதி- நா. பார்த்தசாரதி
துளசிமாடம் - நா. பார்த்தசாரதி
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
பாரிசுக்குப்போ - ஜெயகாந்தன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்
பொய்த்தேவு - கா. நா .சுப்ரமணியம்
காதுகள் - எம்.வி. வெங்கட்ராம்
ரத்தம் ஒரே நிறம்- சுஜாதா
நைலான் கயிறு - சுஜாதா
சித்திரப்பாவை - அகிலன்
காலம் - வண்ணநிலவன்
இவை அனைத்தும் புதினங்கள் பட்டியல் மட்டுமே .
இது தவிர சிறுகதை தொகுப்புகள், கட்டுரை தொகுப்புகள்
பட்டியல் அடுத்த பதிவில் .




5 comments:

shortfilmindia.com said...

நல்ல வாசிப்பனுபவம் உங்களுக்கு நண்பரே..

shortfilmindia.com said...

நல்ல வாசிப்பனுபவம் நண்பரே

கேபிள் சங்கர்

'பரிவை' சே.குமார் said...

நிறைய வாசிப்பு உங்களிடம்...
காரைக்குடியா சந்தோஷம்... நான் தேவகோட்டை.
வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Unknown said...

நானும் ஒரு வாசிப்பாளன் என்பதில் உங்களுடன் சேர்ந்து பெருமை கொள்கிறேன்.. நீங்கள் குறிப்பிட்டவற்றில் எரியும் பனிக்காடு ஒரு மிகசிறந்த ஆவண நாவல்.. மற்றவற்றில் சிலவற்றை தவிர அனைத்தும் படித்திருக்கிறேன்.. மிக நேர்த்தியான பரிந்துரை ...